3 ஏ.எம். (இந்தி) திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
15சன்னி(ரன்விஜய் சிங்), சைரஸ்(சலீல்), ராஜ்(கவின்) மூவரும் டிவி சேனலில் வேலை பார்க்கின்றனர். சன்னியின் காதலியான சாரா(ஆனந்திதா நாயர்) ஒரு நாள் இரவு தனது ரியாலிட்டி ஷோவின் ஆராய்ச்சிக்காக ருத்ரா மில் செல்கிறார். அங்கு சென்ற அவர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். இதனால் மனமுடைந்து போகும் சன்னி, சாரா எப்படி இறந்தார் என்பதை ஆய்வு செய்ய தனது நண்பர்கள் உதவியுடன் ருத்ரா மல்லுக்கு செல்கிறார். அவர் அங்கு சந்திக்கும் மர்மங்களும், ஆச்சர்யங்களும், திகில் சம்பவங்களும் தான் படத்தின் கதை. ஒரு ஹரார் கதைக்கு என்ன தேவையோ அதற்கான செட்டுக்கள் அனைத்தும் பக்காவாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் முன்பாதியில் காமெடி உள்ளிட்ட சில காட்சிகள் உள்ளன. ஆனால் இடைவேளைக்கு பிறகு ஒரு ஹரார் படம் பார்த்த பீலிங்கே இல்லை. தேவையில்லாமல் ஹரார் படத்தில் ரொமான்டிக் பாடல், நடனம் என்று நகருவது படத்தை கெடுத்து விடுகிறது.


ரொம்ப அமைதியான பாத்திரம் ஹீரோ ரன் விஜய் சிங் உடையது. அவர் அமைதியானவர் என்பதாலோ என்னவோ படத்திலும் ஒன்றும் பெரிதாக நடிக்கவில்லை. ஆனந்திதா நாயரின் கதாபாத்திரம் இன்னும் பெரிதாக சொல்லப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் தவி சலீல், கவின் உள்ளிட்ட அனைவரும் படத்தில் வருகிறார்கள் போகிறார், அவரது கதாபாத்திரங்கள் சுத்த வேஸ்ட் என்றே சொல்ல தோன்றுகிறது.


பொதுவாக பேய் படங்களில் இசை பெரிதாக பேசப்பட வேண்டும், ஆனால் இங்கு படத்தின் இசை போர் அடிக்கும் படியாக இருக்கிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கூட ஓ.கே., என்ற அளவிலேயே இருக்கிறது. படத்தின் திரைக்கதை கூட ஏற்கனவே பார்த்த பழைய பாலிவுட் படங்களை போன்றும், வசனங்கள் கூட 90களில் வந்த பாலிவுட் படங்களில் இருந்து சுடப்பட்டது போன்றே தெரிகிறது.


மொத்தத்தில், ஹரார் படம் என்று ''3 ஏஎம்'' படத்தை பார்க்க சென்றால், கொஞ்சம் கூட பயப்படும்படியான காட்சிகள் எதுவும் இல்லை. ஏதோ ஹரார் புத்தகங்களை படிப்பது போன்ற உணர்வே இருக்கிறது.


3 AM - பொருத்தமற்ற இயக்கம்!
ADVERTISEMENTS