கோவா திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
கோவாவிற்கு வரும் வெளிநாட்டு பெண்களில் யாரையாவது கரெக்ட் பண்ணி கல்யாணம் செய்து கொண்டு அதன் மூலம் அயல்நாட்டில் செட்டில் ஆகத் துடிக்கும் தமிழக குக்கிராமம் ஒன்றை சேர்ந்த மூன்று இளைஞர்களை பற்றிய கதைதான் கோவா!

ஆனால், இந்த மெயின் கதையை விட்டு விட்டு ‌கோவாவில் இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுப்பவர், அடைக்கலம் கொடுக்கும் அந்த ஆணின் ஆண் ஜேதடி நபர், அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவர்களால் அவர்களிடையே வரும் சந்தேகம் என கிளைக் கதைகளுக்கெல்லாம்., அதுவும் அருவறுக்கத்தக்க ஹோமோ செக்ஸ்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து மெயின் கதையை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பது கொடுமை!

கதைப்படி, வெளியூருக்கு போய் வந்தாலே வேறு பழக்கங்களை, நாகரீகங்களை ஊருக்குள் கொண்டு வந்து விடுவார்கள் எனும் பயத்தில் இளைஞர்கள் அடுத்த ஊருக்கு போகவே கட்டுப்பாடு வைத்திருக்கும் கிராமத்தில் பிறந்தவர்கள் வைபவ், ஜெய், பிரேம்ஜி அமரன் மூவரும். அதுவும் பிரேம்ஜி அந்த ஊர் கடவுள் அவதாரமாக, சாமி பிள்ளையாக எல்லோராலும் வணங்கப்படும் பிறப்பு. இருந்தாலும் இந்த மூவரும் நைட் ஷோ சினிமா, கூத்து, கும்மாளம் என அடிக்கடி ஊர் எல்லையை தாண்டி பஞ்சாயத்து முன் நிறுத்தப்படுவதும், சின்னதாக தண்டிக்கப்படுவதும் வாடிக்கை. இதனால் இந்த ஊரும் வேண்டாம், பஞ்சாயத்தும் வேண்டாம் என கிளம்பும் மூவரும் மதுரைக்கு கிளம்புகிறார்கள். அங்கு வெளிநாட்டு பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டு அயல்நாட்டில் செட்டில் ஆகப்போகும் தங்கள் அட்டை கரி நண்பனை பார்த்ததும் ‌மூவருக்கும் கோவா போய், நண்பனை மாதிரி பாரின் ஜோடி தேடும் ஆசை உதயமாகிறது. அப்புறம்..? அப்புறமென்ன....? அடித்து பிடித்து சரக்கு லாரி ஏறி, கோவா போகும் மூவரும் தாங்கள் விரும்பிய வாழ்க்கையையும், துணையையும் தேடிப்பிடித்தார்களா, இல்லையா? என்பது மீதிக்கதை!

இப்படித் தெளிவான கதையில் புரியாத விஷயங்களை... புரி்ந்தும் புரியாமலும் இருக்க வேண்டிய (ஹோமோ செக்ஸ்) சமாச்சாரங்களையெல்லாம் புகுத்தி கோவாவா? ஹேமோவா? என கேட்க வைத்திருக்கிறார் டைரக்டர் வெங்கட்பிரபு! நினைத்திருந்தார் தவிர்த்திருக்கலாம்!

ஜெய், வைபவ், பிரேம்ஜி அமரன் இவர்களது கோவா தோழர் அரவிந்த் ஆகாஷ் என நான்கு நாயகர்களும் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர் என்றாலும் பிரேம்ஜி அடிக்கடி குளோஸ் அப்பில் வந்து நம்மை பயமுறுத்துவதையும் தவிர்த்திருக்கலாம்.

சிநேகா, பியா, மிலானி, வில்லன் நடிகர் சம்பத் (ஆமாம் பின்னே...) என நான்கு கதாநாயகிகள். நால்வரும் நச்சென்று நடித்துள்ளனர். அதிலும்  சிநேகா, பியாவை அந்த வெள்ளைக்கார மிலானி ஓவர் டேக் செய்து விடுகிறார் என்றால், இவர்கள் மூவரையும் நடிகர் சம்பத் பீட் செய்து விடுகிறார். பேஷ்! பேஷ்!!

ஜெய், பியாவின் காதலைவிட பிரேம்ஜி - மிலானியின் காதல் உருக்கம் என்றால் வைபவ்- சிநேகாவின் காதல் கல்யாண உதறல்...!

சக்தி சரவணனின் ஒளிப்பதிவில் கோவா பால்கோவா! யுவன் சங்கர்ராஜாவின் இசையில் ஒன்பது பாடல்கள் ஒன்றிரண்டு மனதில் பதிகிறது. ஒன்றிரண்டு ஓ.கே. எனு தாளம் போட வைக்கிறது.

‌கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என டைட்டிலில் கார்டு வரும் வெங்கட்பிரபுவிடம் கேட்க வேண்டும்... கோவாவில் கதை எங்கே இருக்கிறது என்று!

கோவாவின் சப்-டைட்டிலாக வரும் எ வெங்கட்பிரபு ஹாலிடே மாதிரியே படமும் கதை இல்லாத ஹாலிடே - ஜாலிடேவாக இருக்கிறது.

கோவா : டைரக்டருக்கும் அவரது டீமிற்கும் வேண்டுமானால் பால்கோவாவாக இருக்கலாம்...! நமக்கு?
ADVERTISEMENTS