திரு திரு துறு துறு திரைவிமர்சனம்

ADVERTISEMENTS
ADVERTISEMENTS
[caption id="attachment_37" align="aligncenter" width="300" caption="Thiru Thiru Thuru Thuru"]Thiru Thiru Thuru Thuru

எதையும் விளையாட்டுத்தனமாக செய்துவிட்டு வம்பில் மாட்டிக் கொண்டு திரு திரு... என்று முழிக்கும் ஹீரோவும், ஒவ்வொன்றையும் திட்டமிட்டு துறு துறு... என்று செய்து ஜெயிக்கும் ஹீரோயினும் ஒரு விளம்பர கம்பெனியில் ஒன்றாக வேலை செய்கின்றனர். கம்பெனியை தூக்கி நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும் இருவரும் கொள்ளும் ஊடலும், கூடலும்... அதனால் வரும் காதலும்தான் திரு திரு துறு துறு!

[caption id="attachment_38" align="aligncenter" width="300" caption="Thiru Thiru Thuru Thuru"]Thiru Thiru Thuru Thuru

திரு திரு நாயகர் அஜ்மல். துறு துறு நாயகி புதுமுகம் ரூபா. விளம்பர நிறுவனம் நடத்துகிறார் மவுலி. அஜ்மலை மகனாக நினைக்கும் மவுலியின் கம்பெனியை தூக்கி நிறுத்தும் கட்டாய பொறுப்பு அஜ்மலுக்கு. தங்கள் நிறுவனம் தயாரிக்கும் விளம்பர படம் ஒன்றிற்கு ஒரு குழந்தை தேவைப்பட, அ‌தை கடைசி நேரத்தில் தேடிப் பிடிக்கிறார். ஆனால் அக்குழந்தை அதன் பெற்றோரிடம் இருந்து கடத்தப்பட்டுள்ள குழந்தை எனும் உண்மை தெரிந்ததும், அதை அந்த விளம்பர படத்தில் அசட்டையாக நடிக்க வைக்கும் அஜ்மலுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகள். விளம்பர ஒப்பந்தத்திற்கு குழந்தையின் பெற்றோர் கையெழுத்து மற்றும் குழந்தையை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டிய கட்டாயம்,  திருடப்பட்ட குழந்தை என்பதை முதலாளி மவுலியிடம் மறைப்பது, அந்த விளம்பரம்தான் கம்பெனியை காப்பாற்ற வேண்டிய சூழல் என்பன போன்ற இன்னும் பல சிக்கல்களுக்கு எல்லாம் தோளோடு தோள் நின்று அஜ்மலுக்கு உதவி செய்கிறார் ஹீரோயின் ரூபா. இதுதான் திரு திரு துறு துறு படத்தின் மொத்த கதையும்! இதனூடே அஜ்மல் - ரூபாவின் நட்பு காதலாவதையும், மவுலியின் மறதி காமெடிகளையும், குழந்தைக்காக துரத்தும் வில்லன்களின் ஆக்ஷனையும் கலந்து கட்டி படத்தை ஜனரஞ்சகமாக தர முயன்றிருக்கிறார் பெண் இயக்குனர் ஜே.நந்தினி! அதில் பாதி வெற்றி.. பாதி தோல்வி..!

[caption id="attachment_39" align="aligncenter" width="300" caption="Thiru Thiru Thuru Thuru"]Thiru Thiru Thuru Thuru

திரு திரு அஜ்மல் பாத்திரத்திற்கு ஏற்ற விறு விறு..! முந்தைய படங்களைக் காட்டிலும் இதில் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருக்கிறார்.

துரு துரு ரூபா இப்போது தானே எண்ட்ரி ஆகியிருக்கிறேன். சற்றே பொறு.. பொறு... என்று குடும்பப் பாங்கிற்கும், கவர்ச்சிக்கும் இடையில் முடிவெடுக்க முடியாமல் தடுமாறி இருப்பதாக தோன்றுகிறது. ஆனாலும் அவரஇ இளமை... இனிமை!

வழக்கம்போலவே மவுலி உதடு பிரியாமல் ஜோக் சொல்லி நம்மையும் வாய் விட்டு சிரிக்க வைக்கிறார். அவரது பெயர் மறதியும், மனைவியிடம் இப்பக்கூட சைக்கிள் ஓட்ட நான் ரெடி..! என்று பேசும் யதார்த்தமும் மகிழ்ச்சி, நெகிழ்ச்சி ஆகியவற்றுக்கு சின்ன சாம்பிள்!

மணிசர்மாவின் இசையும், சுதிரின் ஒளிப்பதிவும் பெண் இயக்குனர் நந்தினிக்கும் பெரிய பலம். ஆனால் ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் நிறைய இடங்களில்... குறிப்பாக க்ளைமாக்ஸில் தெரியும் நாடக் தன்மையை தவிர்த்திருந்தால் திரு திரு துறு துறு நல்ல விறுவிறு படமாக அமைந்திருக்கும்!

[caption id="attachment_41" align="aligncenter" width="300" caption="Thiru Thiru Thuru Thuru"]Thiru Thiru Thuru Thuru

திரு திரு துறு துறு : விறு.. விறு.. பொறு.. வெறு!
ADVERTISEMENTS